மோ.கணேசன்

MoGanesan_pic

மோ.கணேசன் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. விகடன் மூலம், மாணவ பத்திரிக்கையாளராக இதழியல் துறைக்கு வந்தவர். இவர் இதழியல், வரலாற்றியல் ஆகியவற்றில், முதுகலைப் பட்டமும், இதழியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மூத்த பத்திரிக்கையாளரான இவர் எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் எழுதிய இரண்டு நூல்களைத் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது. வாலு பதிப்பகம் சார்பில், இரு நூல்களைத் தொகுத்துள்ளார்.

‘அறம் செய்ய விரும்புவோம்’, ‘மாயாவியின் திமிர்’, ‘வாலுவின் ஜாலி புதிர்கள்’, ‘இப்படித்தான் ஜெயித்தார்கள்’, கு’றுக்கெழுத்து அறுபது’, ‘விட மாட்டேன் உன்னை’, ‘ஓடி வா, ஓடி வா, சின்னக்குட்டி ‘டும் டும் தண்டோரா’ ஆகியவை, இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள். இவற்றைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை வெளியிட்டுள்ளது.

Share this: