வேட்டையாடு விளையாடு

photo of vaetaiyadu vilayadu book cover

இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன.  மனிதனும் ஒரு வேட்டையாடி தான்.  ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.  விலங்குகள் தங்கள் உணவுத் தேவைக்காகப் பசியிருந்தால் மட்டுமே வேட்டையாடக் கூடியவை.  விலங்குகள் வேட்டையாடுவதற்கு உதவ அவைகளின் உடல்களில் அமைந்துள்ள சிறப்பு உறுப்புகள் பற்றியும், அவை வேட்டையாடும் முறைகள் பற்றியும், இந்நூல் பேசுகின்றது.

முதல் கட்டுரையில் சிங்கம் பற்றிய விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன. சிங்கம் உயிர்வாழ வாரத்துக்கு 108 கிலோ உணவு வேண்டும்;. தாக்குதல் நடத்தும்போது, நீளவாக்கில் 40 அடிதூரம் ஒரே பாய்ச்சலாகப் பாயும்;  தங்கநிறக் கழுகுகள் பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படுகின்றது; கடல்நீருக்குள் உலவும் அசுர கொலையாளி வெள்ளைச்சுறா; முதலை 150 கோடி வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னணி உடையது;  புலி ஒரு தனிமை விரும்பி; உலகின் அழியும் பட்டியலில், புலி தான் முதலிடம் வகிக்கிறது என்பன போன்ற தெரியாத பல தகவல்களைச் சுவாரசியமான நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். 

இன்னும் ஓட்ட நாயகன் சிறுத்தை, ஆப்பிரிக்க வேட்டை நாய், துருவ கடல்வாழ் வால்ரஸ் சிலந்தி, பச்சோந்தி, கீரி ஆகியவற்றின் வேட்டை குறித்த செய்திகளும், இதில் உள்ளன.  கடைசிக் கட்டுரையில் பலவித பறவைகள் பற்றியும், அவற்றின் இனிய கானம் பற்றியும் சுவைபடக் கூறியிருக்கிறார். இயற்கை வளங்களைச் சூறையாடி, இயற்கையின் சமன் நிலையை நிலைகுலைய செய்வது, மனிதனின் வேட்டை முறை மட்டுமே;  அனைத்து உயிர்கட்கும் சொந்தமான பூமியைப் பாதுகாத்து, நம் சந்ததிக்கு விட்டுச் செல்வது நம் கடமை என்று ஆசிரியர் வலியுறுத்தியிருக்கின்றார்.

காட்டுயிர்கள் பற்றியும், அவை வேட்டையாடும் முறை பற்றியும் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அறிந்து கொள்ள உதவும் நூல்.  

வகைகட்டுரைகள்
ஆசிரியர்பேராசிரியர் சோ.மோகனா
வெளியீடுபுக்ஸ் பார் ஃசில்ரன், சென்னை (+91) 8778073949
விலை₹ 80/-
வேட்டையாடு விளையாடு
Share this: