எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தில், 1966 ல் பிறந்து, தற்போது சென்னையில் வசிக்கிறார். தீவிர வாசகரும், முழு நேர எழுத்தாளருமான இவர், புனைவு, அபுனைவு வகைகளில், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிறுவருக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கும் இவருக்கு, நாகஸ்வர கலைஞர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக, 2018 ஆம் ஆண்டு, சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது.இவருடைய தளத்துக்கான இணைப்பு:-. https://www.sramakrishnan.com