முல்லை தங்கராசன்

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.  கார், லாரி ஓட்டுநராகத் தம் வாழ்வைத் துவங்கிய இவர், தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர்.  மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர்

‘மணிப்பாப்பா’ (1976), ‘ரத்னபாலா’ (1979) என்கிற 70-களின் இரண்டு பிரபல சிறார் இதழ்களுக்கு ஆசிரியராகவும், முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும், பணியாற்றியவர்.சிறார்களுக்கான சித்திரக் கதைகள், ஓவியங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட அவர், முழு வண்ணத்திலான காமிக்ஸ் புத்தகங்களையே உருவாக்கினார்.

Share this: