மாயவனத்தில் ஓர் மந்திரப்பயணம்

maayavanathil_pic

இதில் ஐந்து கதைகள் உள்ளன. மாயவனம் என்ற முதல் கதையில், சகி வளமான நாடு. சகி ஆற்றில் வஜ்ரா மீன்களிடம் இருந்த மாணிக்கங்களே, அந்த வளத்துக்குக் காரணம் என்பதையறிந்த பக்கத்து நாட்டு அரசன், அந்த மீன்களைப் பிடித்து மாணிக்கங்களைக் கைப்பற்றுகிறான். அதற்குப் பிறகு சகி நாடு வளம் குறைந்த நாடாக ஆகிறது. மீண்டும் சகி நாடு பழைய நிலைமைக்குத் திரும்பியதா? மாணிக்கங்கள் திரும்பக் கிடைத்ததா? என்பதையறிய, இக்கதைப்புத்தகம் வாங்கி வாசியுங்கள்.

தேர்வில் தோல்விக்காகப் பயப்படத் தேவையில்லை என்ற பாடத்தை இயற்கை நிகழ்வுகளின் மூலம், ஷிவானி கற்றுக் கொள்கிறாள்.   ‘கடக்,முறுக்,நொறுக்’ கதையின் மூலம், குழந்தைகள் நொறுக்குத் தீனி உண்பதால் வரும் கேடுகளையும், சத்தான காய்கறி உணவு சாப்பிடுவதன் அவசியத்தையும், தெரிந்து கொள்வார்கள். எந்நேரமும் மொபைலில் விளையாடுவதைத் தவிர்த்துக் கிராமத்து விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதையும், தோழி சொல்லைத் தட்டக் கூடாது என்பதையும், அடுத்த இரு கதைகள் சொல்கின்றன.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்ராஜலட்சுமி நாராயணசாமி
வெளியீடு:-பாரதி பதிப்பகம், சென்னை-92. +91 93839 82930
விலைரூ 70/-
Share this: