48வது சென்னை புத்தகத்திருவிழா

Bookfair_pic

சென்னை நந்தனம் (ஒய்.எம்.சி.ஏ) உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இத்திருவிழா, வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 வரையிலும், விடுமுறை நாட்களில் முற்பகல் 11 மணி முதல் இரவு 8.30 வரையிலும் நடைபெறும். பபாசி (BAPASI) எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தென்னிந்தியா புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கத்தால் நடத்தப்படும் இத்திருவிழாவுக்காக 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி தரப்படும். குழந்தைகளின்  வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நுழைவு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாய்ப்புள்ள பெற்றோர் அவசியம் குழந்தைகளுடன் இந்தப் புத்தகத் திருவிழாவுக்குச் சென்று வாருங்கள். அங்கே குழந்தைகள் வாங்க விரும்பும் ஓரிரு புத்தகங்களையாவது வாங்கிக் கொடுங்கள். புத்தகம் வாங்குவதற்காகும் செலவு செலவல்ல; அது அறிவுக்கான முதலீடு! ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அலமாரியிலாவது குழந்தைகளின் புத்தகங்களை வாங்கி வைத்து நூலகம் அமைத்துக் கொடுங்கள். பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பே குழந்தைகளின் பன்முகத் திறமையை வளர்க்கும்.

இந்தக் காலக் குழந்தைகளுக்காகப் பல புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. பழைய காலப் பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், ராமாயணம், மகாபாரதக் கதைகள் போன்றவற்றையே மீண்டும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல், நவீன அறிவியல் சிந்தனைகளுடன் கூடிய நூல்களை வாங்கிக் கொடுங்கள்.

நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளின் வயதுக்கேற்ற நூல் அறிமுகங்கள், எங்கள் சுட்டி உலகத்தில் உள்ளன. நூல் தேர்வு செய்ய எங்கள் நூல் அறிமுகத்தையும், நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *