லைலா தேவி பெற்ற பட்டங்கள்:- எம்.ஏ; எம்.ஃபில். இவர் எழுதிய புத்தகங்கள்: “நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்”, “ரோசா பார்க்ஸ்” ஆகியவை.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்டுள்ள சிறார் வாசிப்பு நூல் வரிசையில், இவர் மொழியாக்கம் செய்துள்ள ‘நரி-என் – குழந்தை’ என்ற கதையும், ‘அகப்பை சூப்’ என்ற கதையும் வெளியாகியுள்ளன. தம் அனுபவம் கலந்து எளிய மொழியில் இவர் எழுதியுள்ள ‘பாட்டியும் பேத்தியும்’ என்ற சிறு நூலைப் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.