ஞா.கலையரசி

writer photo

புதுச்சேரி யூனியனைச் சேர்ந்த காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  கணவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 

வாசிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடித்தவை.  ‘புதிய வேர்கள்’ எனும் தலைப்பில், சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஊஞ்சல் (https://unjal.blogspot.com) இவரது வலைப்பூ.  முகநூல் ஐடி- Kalayarassy Pandiyan.

சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘சுட்டி உலகம்’ https://chuttiulagam.com எனும் வலைத்தளத்தைத் துவங்கி, அதன் ஆசிரியர் குழுவில் உள்ளார். இதில் சிறுவர் நூல் அறிமுகம், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் குறித்த விபரங்கள் ஆகியவை வெளியாகின்றன. சிறுவர் பாடல், கதை சொல்லுதல் ஆகிய காணொளிகளையும் சுட்டி உலகம் வெளியிடுகின்றது.  பூஞ்சிட்டு https://poonchittu.com எனும் சிறுவர் மின்னிதழிலும், ஆசிரியர் குழுவில் உள்ளார்.

இவர் எழுதியுள்ள சிறார் நூல்கள் வருமாறு:-

  1.  மந்திரக்குடை – சிறுவர் நாவல் – புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு (பாரதி புத்தகாலயம், சென்னை).
  2. பூதம் காக்கும் புதையல் – இளையோர் நாவல் – வானம் பதிப்பகம், சென்னை.
  3. நீலமலைப் பயணம் – இளையோர் நாவல் – புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு (பாரதி புத்தகாலயம், சென்னை).
  4. சுட்டிச் சுண்டெலி – சிறார் வாசிப்பு நூல் – புக்ஸ் ஃபார் சில்ரன் & பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் இணைந்து வெளியீடு
  5. பேய்த் தோட்டம் – சிறார் கதைகள் – வானம் பதிப்பகம், சென்னை.
  6. குட்டிச் செடி – சிறுவர் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் – பாரதி பதிப்பகம், சென்னை.
  7. மலைச்சிறகன் – சிறுவர் கதை – தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடு ( தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டம்)
  8. வங்கிக்குச் செல்வோமா? – சிறுவர் கதை – தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடு ( தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டம்)
  9. மழைக்காடுகள் – சிறுவர் கதை – தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடு ( தமிழ்நாடு அரசு இளந்தளிர் இலக்கியத் திட்டம்)
  10. நிலாப்பாட்டி – சிறார் கதைகள் – எஸ்.ஆர்.வி.பள்ளி தமிழ்ப்பதிப்பகம் & புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு.

இந்த அச்சு நூல்கள் தவிர, அமேசான் கிண்டிலில் Kalayarassy.G என்ற பெயரில், சில சிறுவர் கதைகளையும், மின்னூலாக வெளியிட்டுள்ளார்.

Share this: