பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறார்க்காக மிக எளிய மொழியில், மிகக் குறைந்த விலையில் 17 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 6 வாசிப்பு நூல்கள் 18-07-2025 அன்று கோவை புத்தகத்திருவிழாவில் வெளியிடப்பட்டன.
இந்த வரிசையில் இதுவரை மொத்தம் 23 நூல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் வெளியான நான்காவது செட்டில் வெளியான நூல்கள் & ஆசிரியர்கள் விபரம் வருமாறு:-
சிறார் வாசிப்பு நூல் 18 -‘மாதியும் யானையும்’ – குருங்குளம் முத்து ராஜா
நூல் 19 – ‘சந்தனக் கூடு’ – கார்த்திகா கவின் குமார்
நூல் 20 – ‘கொடுக்கும் மரம்; அடிக்கும் மரம்’ – லைலா தேவி
நூல் 21 – ‘தியா எங்கே?’ – ஞா.குமுதம்
நூல் 22 – ‘பண்டித ரமாபாய்‘ – ஞா.கலையரசி
நூல் 23 – ‘நத்தையின் ஆசை’ – ராஜிலா ரிஜ்வான்
இவை கல்வியாளரும் பேராசிரியருமான ச.மாடசாமி அவர்களின் நேரடி வழிகாட்டலில் உருவான குறுநூல்கள். ஒவ்வொன்றின் விலை ரூ 20/- மட்டுமே. இவை எழுத்துக் கூட்டி வாசிக்கும் சிறுவர்க்கானது. தமிழ் சரியாக வாசிக்கத் தெரியாத சிறார்க்கானது.
இவற்றைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. இவற்றை ஆங்காங்கே நடைபெறும் புத்தகத்திருவிழாக்களில் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அரங்கில் வாங்கலாம்.
ஆன்லைன் மூலமாக வாங்க https://thamizhbooks.com என்ற பக்கத்திற்குச் சென்று வாங்கலாம். அந்தத் தளத்தில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க நூல்கள் என்று தேடினாலும் கிடைக்கும்.
பண்டித ரமாபாய் புத்தகம் வாங்க இணைப்பு:-
https://thamizhbooks.com/product/panditha-ramabhai
இது போல் புத்தகப் பெயரைக் குறிப்பிட்டுத் தேடியும் வாங்கலாம்.
அன்புடன்,
ஆசிரியர்,
சுட்டி உலகம்.