வானில் பறந்த மகிழ்

VaanilMagizh_pic

வாசிப்பு இயக்கத்தை முன்னெடுக்கும் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கமும், சென்னை பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து, ஏற்கெனவே 5 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக்கூடிய மிக எளிய மொழியில், குறைந்த விலையில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகி உள்ளது.

பெரிய எழுத்தில் மிகக் குறைந்த சொற்களில், குழந்தைகளுக்குத் தெரிந்த எளிய சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புத்தகம். வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்து கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம் இது.

வகை – (ஆங்கிலக் கதைகளின் தழுவல்)சிறார் கதைகள்
ஆசிரியர் –ஆதி வள்ளியப்பன்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 8778073949.
விலைரூ 20/-
Share this: