பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மிகக் குறைந்த விலையில், ஏற்கெனவே 11 சிறார் வாசிப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் சிறார் வாசிக்கக் கூடிய மிக எளிய மொழியில், இந்தச் சிறார் வாசிப்பு நூல் வெளியாகியுள்ளது.
குழந்தை வாசிக்கக் கூடிய எளிய மொழி, சிறு சிறு வாக்கியம், படங்கள் ஆகியவை, இந்த வாசிப்பு இயக்கச் சிறு புத்தகத்தின் வேர்கள். இது வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.
வைக்கம் எங்கே உள்ளது? அங்கே என்ன போராட்டம்? அதில் பெரியாரின் பங்கு என்ன? பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்!’ என்று பட்டம் கொடுத்தவர் யார்? பெரியார் சிறையில் அனுபவித்த கொடுமைகள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள, இந்தப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் வாங்கி வாசிக்கக் கொடுங்கள். இதில் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்த நான்கு கருப்பு வெள்ளை படங்கள் உள்ளன.
வகை – சிறார் வாசிப்பு நூல் | சிறுவர் கட்டுரை |
ஆசிரியர் | ஞா.கலையரசி |
வெளியீடு:- | புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18. |
விலை | ரூ 20/- |