பொம்மி – சிறுவர் இதழ்

Pommi_pic

மாதம் தோறும் வெளியாகும் பொம்மி சிறுவர் மாத இதழின் ஆசிரியராகக் கவிதா ஜெயகாந்தன் அவர்களும், முதன்மை ஆசிரியராக ஜெ.ஜெயகாந்தன் அவர்களும் இருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து பொம்மி வெளியாகிறது.

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் என்பதால் முதல் பக்கத்தில் ‘ஆசான் தான்’ என்ற தலைப்பில் ஆசிரியரை மதித்து நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கே.பி.பத்பநாபன் எழுதிய பாடல் உள்ளது. அடுத்ததாக ‘வரம் தரும் தாவரங்கள்’ என்ற தலைப்பில் கரிசலாங்கன்னி, கடுகு, வல்லாரை போன்ற மூலிகைத் தாவரங்கள் குறித்த கட்டுரையைச் சிதம்பரம் இரவிச்சந்திரன் எழுதியுள்ளார். ‘வாலுவிடம் கேளுங்கள்’ என்பது மாதந்தோறும் இடம்பெறும் கேள்வி-பதில் பகுதி. இதில் அறிவியல், வரலாறு உட்பட பல்துறை சார்ந்து கேட்கப்படும் பல கேள்விகளுக்கு வாலு பதிலளிக்கிறார்.

Share this: