பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024– நெகிழ்ச்சி தருணங்கள்

Neeraj_pic

யாருமே எதிர்பார்க்காதவாறு பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலகச் சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தையும் வென்றார். பாகிஸ்தான் வரலாற்றில் தனிநபர் பிரிவில் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவே. மேலும் 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் இப்போது தான் பதக்கம் வென்றுள்ளது.

அர்ஷத் நதீம் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. சிறப்புப் பயிற்சிகள் எடுக்க அவருக்குப் போதுமான வசதி வாய்ப்பு இல்லை. புது ஈட்டி வாங்கக் கூட வசதியில்லாச் சூழ்நிலை. ஏழெட்டு ஆண்டுகளாகத் தாம் பயன்படுத்திய ஈட்டி சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாகி உடையக் கூடிய நிலையிலிருப்பதால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன், யாராவது புது ஈட்டி வாங்கித் தந்து உதவுங்கள் என்று, நதீம் 2024 மார்ச் மாதம் பாகிஸ்தான் தேசிய ஃபெடரேசனுக்கும், பொது மக்களுக்கும் சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

அதைப் பார்த்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஒலிம்பிக்கில் தம் போட்டியாளராகக் களமிறங்கக் கூடியவர் என்று எண்ணாமல், “அர்ஷத் புது ஈட்டி வாங்கக் கஷ்டப்படுவதை அறிந்து, அதிர்ச்சியாக இருக்கிறது; அவர் ஈட்டி எறிதலில் மிகத் திறமையான வீரர். அவருக்குப் பாகிஸ்தான் அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உதவவேண்டும்; ஈட்டி தயாரிப்பவர்கள் அவரை ஸ்பான்சர் செய்து உதவ வேண்டும்” என்று முதல் ஆளாகத் தம் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

போட்டி முடிந்த பிறகு நீரஜ் சோப்ரா கொடுத்த பேட்டியில், “இன்று அர்ஷத் நஜீம் நாள். மிகச் சிறப்பாக அவர் விளையாடினார். நான் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினேன். சில இடங்களில் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். நம் தேசிய கீதம் இன்று இசைக்காமலிருக்கலாம். எதிர்காலத்தில் நிச்சயமாக வேறு இடங்களில் அது இசைக்கும்” என்று பதில் கூறினார்.  

Neerainadeem_pic

Pc – Thanks – Times Now/ ANI/Internet

Share this: