தலையங்கம் – செப்டம்பர் 2025

babyreads_pic

எல்லோருக்கும் அன்பு வணக்கம்.

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அவரது 147ஆம் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுக்கப் பரவலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

04/10/2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடக்கவிருக்கின்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். 

மதுரையில் புத்தகத் திருவிழா 05/09/2025 துவங்கி 15/09/2025 வரை நடைபெறுகின்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அவசியம் இந்தப் புத்தகக் காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவியுங்கள். உங்கள் குழந்தைகளின் பன்முகத் திறமை பெருகப் புத்தக வாசிப்பு முக்கியம்! மின்னணுச் சாதனங்களிலிருந்து அவர்கள் கவனத்தைத் திருப்பவும் புத்தக வாசிப்பு சிறந்த மாற்றாக அமையும்.

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளின் போது புத்தகம் பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தைத் துவங்குங்கள். வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம்! அடுத்த தலைமுறை அறிவார்ந்த சமுதாயமாக மலர நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: