தலையங்கம் – ஜூலை-2024

Chidrenreadsea_pic

‘தன்வியின் பிறந்தநாள்’ சிறார் கதைத்தொகுப்பு குறித்த, விரிவான அறிமுகக் கட்டுரை, சுட்டி உலகத்தில் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் 10 கதைகள் உள்ளன.

குழந்தைகளுக்கு இயல்பிலேயே, மிக விருப்பமான நாய், பூனை, ஆடு, கோழி, பூச்செடி போன்றவற்றின் மீது, அவர்கள் செலுத்தும் பேதமற்ற அன்பும், பாசமும் இக்கதைகளின் அடிப்படைக் கருத்து. ‘பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதில்லை; இயற்கையை நேசிக்க வேண்டும்; உயிர்களிடத்து அன்பு வேணும்’ என்ற உயரிய கருத்துகளை, வாசிக்கும் குழந்தைகள் மனதில், விதைக்கும் கதைகளிவை. அவசியம் வாங்கி வாசியுங்கள்.

தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகர்களில், புத்தகத் திருவிழா தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. உங்கள் ஊருக்கு அருகாமையில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்கு, வாய்ப்புள்ளோர் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் விரும்பும் கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து, வாசிப்புப் பழக்கத்தை இளம் வயதிலேயே அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளின் படைப்பூக்கம் பெருக, பாடப்புத்தகம் தாண்டிய புத்தக வாசிப்பு மிகவும் அவசியம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968) புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோகர்ணம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் பெற்றோர் நாராயணசாமி, சந்திரம்மாள் ஆகியோர்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவர் ஆனார். இவர் பதவிக்காலத்தில் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணம் தடை செய்யும் சட்டம் போன்ற சில புரட்சிகரச் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கினார். 1956 இல் பத்ம பூஷன் விருது பெற்றார்.

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

Share this: